சொந்த ஊர் பயணம்

வெள்ளிக்கிழமை நேரத்திற்கு வராத பேருந்திற்காக
பின் இரவில் ஓர் மூலையில் நின்றுக்கொண்டு
நிலாவின் அழகில் மயங்கி
வேறு ஊருக்குச் சொல்லும் பேருந்தில்
ஒரு சாளர அமர்வில் நம்மைப் பாராமல் அமரந்திருக்கும்
என்றோ பழகிய நபரின் நினைவிலிருந்து தொடங்கிறது
சொந்த ஊர் பயணம்.